search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி கைது"

    • கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக விவேகானந்தன் மாணவியை சீரழித்து வந்து உள்ளார்.
    • போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விவேகானந்தனை கைது செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன (52). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் பிரிந்தார்.

    இந்தநிலையில் ஓரிக்கை அரசு நகர் பகுதியை சேர்ந்த கணவரால் கைவிடப்பட்ட இளம்பெண் ஒருவருடன் விவேகானந்தனுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இளம்பெண்ணுடன் விவேகானந்தன் கணவன்-மனைவி போல் வாழ்ந்தார். அவர்களுடன் அந்த இளம்பெண்ணின் தங்கையும் தங்கி இருந்தார். அவர் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கிடையே விவேகானந்தன் கள்ளக்காதலியின் தங்கையான பிளஸ்-1 மாணவியையும் மிரட்டி செக்ஸ் தொல்லை கொடுத்தார்.

    கடந்த 3 ஆண்டுக்கும் மேலாக அவர் மாணவியை சீரழித்து வந்து உள்ளார். பயந்து போன மாணவி இதுபற்றி தனது அக்காளிடம் சொல்லவில்லை. இதனை பயன்படுத்தி விவேகானந்தன் தனது அத்துமீறலை தொடர்ந்து உள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விவேகானந்தன் தனது தங்கையையும் சீரழித்து இருப்பது அறிந்து இளம்பெண் அதிர்ந்தார். இதுகுறித்து அவர் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விவேகானந்தனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வாழப்பாடி பகுதியில் கள்ளச்சாரயம் விற்பனையை தடுக்க உரிய நடவ டிக்கை எடுக்கு மாறு போலீசாருக்கு டி.எஸ்.பி. ஹரி சங்கரி உத்தரவிட்டார்.
    • இதனையடுத்து வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி பகுதியில் கள்ளச்சாரயம் விற்பனையை தடுக்க உரிய நடவ டிக்கை எடுக்கு மாறு போலீசாருக்கு டி.எஸ்.பி. ஹரி சங்கரி உத்தரவிட்டார். இதனையடுத்து வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது வாழப்பாடி அடுத்த மலை யாளப்பட்டி கிராமத்தில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 110 லிட்டர் சாரா யத்தை போலீசார் பறிமுதல் செய்த னர். இதை விற்பனை செய்வ தற்காக பதுக்கி வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த தொழி லாளி நாச்சி (வயது 49) என்ப வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆறுமுகத்துக்கும் ஜெயந்திக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.
    • உயிருக்கு போராடிய 2 பேரையும் அங்கு இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை,

    கோவை ஒண்டிப்புதூர் காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி ஜெயந்தி (வயது 38). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வருகிறார்.

    ஜெயந்தி சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சமையல் தொழிலாளி ஆறுமுகம் (67) என்பவரிடம் கடன் வாங்கியிருந்தார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு இருந்து வந்ததது.

    சம்பவத்தன்று ஜெயந்தி வேலைக்கு செல்வதற்காக தனது தாயுடன் சிங்காநல்லூரில் உள்ள ஒரு மில் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த ஆறுமுகத்துக்கும் ஜெயந்திக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயந்தியின் இடுப்பில் குத்தினார்.

    இதனை தடுக்க முயன்ற அவரது தாயாருக்கும் கத்திக்குத்து விழுந்தது. தாயும், மகளும் வலியால் அலறி துடித்தனர். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் ஆறுமுகம் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    உயிருக்கு போராடிய 2 பேரையும் அங்கு இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கோவை சீரநாயக்கன்பாளையம் ஜீவானந்தம் தெருவை சேர்ந்த சமையல் தொழிலாளி ஆறுமுகம் என்பவரை கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கோவையில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தனர்.
    • 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கோவை,

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாந்திமேட்டில் உள்ள தனியார் ஓட்டல் அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து பெரிய நாயக்கன் பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜா தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சா பதுக்கி விற்பனை செய்து கொண்டு இருந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து போலீசார் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீசார வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் கே. கவுண்டன்பாளையம் ஸ்ரீபாரதி நகரை சேர்ந்த கூலித் தொழிலாளி மாரியப்பன் (வயது 44) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • கடையில் இருந்து ஒருவர் செல்போனை திருடி கொண்டு ஓடினார்.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து செய்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நந்தா (30). இவர் விஜயமங்கலம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

    இவர் தனது கடையை திறந்து வைத்து விட்டு அருகே உள்ள வங்கிக்கு சென்றார். இதையடுத்து அவர் மீண்டும் கடைக்கு வந்தார். அப்போது கடையில் இருந்து ஒருவர் செல்போனை திருடி கொண்டு ஓடினார்.

    இதனை கண்ட நந்தா சத்தம் போட்டார். இதை கண்ட பொதுமக்கள் செல்போன் திருடி கொண்டு ஓடியவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் பெருந்துறை அடுத்த பல்லகவுண்டன் பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (42). கூலி தொழிலாளி என்பதும், கடையில் செல்போனை திருடியதும் தெரியவந்தது.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து செய்தனர். இதை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கண்ணன் ஒரு வாரத்துக்குப் பின்னர் பணத்தை பார்த்தபோது அங்கு பணம் இல்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது சிவபெருமான் பணத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    திருப்பூர்:

    திருப்பூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 39). கடந்த சில வருடங்களாக மேற்கு ஆப்பிரிக்காவில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம் திருப்பூர் வந்த இவர் தாய் பாப்பம்மாளுடன் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் கண்ணன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இவரை மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு அதே பகுதியை சேர்ந்த நண்பர் சிவபெருமான் (41) அழைத்துச்சென்று வந்தார். சிவபெருமான் தறி தொழிலாளியாக உள்ளார் . கடந்த சில நாட்களுக்கு முன்பு அருப்புக்கோட்டையில் உள்ள வீட்டை புதுப்பிப்பது குறித்து தாயும், மகனும் பேசினர்.

    இதற்காக தான் வெளிநாட்டில் வேலை செய்தபோது அனுப்பிய பணம் மற்றும் அக்கம்பக்கத்தில் கொடுத்து வைத்திருந்த பணம் என ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை சேகரித்து வீட்டில் வைத்திருந்தனர்.

    இதனை தெரிந்துகொண்ட சிவபெருமான் யாருக்கும் சந்தேகம் வராதபடி பகல் நேரங்களிலேயே வீட்டிற்குள் சென்று கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை திருடி சென்று உள்ளார். இந்த நிலையில் கண்ணன் ஒரு வாரத்துக்குப் பின்னர் பணத்தை பார்த்தபோது அங்கு பணம் இல்லை. அதிர்ச்சி அடைந்த அவர் திருமுருகன்பூண்டி போலீசில் புகார் செய்தார் .

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது சிவபெருமான் பணத்தை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 75 ஆயிரம் பணத்தை மட்டும் பறிமுதல் செய்தனர். மீதமுள்ள பணத்தை தான் வாங்கிய கடனை அடைத்துள்ளதுடன், நண்பர்களுக்கு மது வாங்கி கொடுத்தும் வெளியிடங்களுக்கு சென்றும் உல்லாசமாக இருந்து செலவழித்துள்ளார். சிவபெருமானை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தினமும் சூர்யகுமார் சிறுமியிடம் செல்போனில் பேசியுள்ளார்.
    • சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை அளித்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் சூர்யகுமார் (வயது 23). இவர் திருப்பூர் செரங்காடு பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த 17 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது.

    தினமும் சூர்யகுமார் சிறுமியிடம் செல்போனில் பேசியுள்ளார். இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி சூர்யகுமார், சிறுமியிடம் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தலாம் என்று ஆசைவார்த்தை கூறி ஒட்டன்சத்திரத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்குள்ள ஒரு லாட்ஜில் சிறுமியை தங்க வைத்து பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் தெற்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார், ஒட்டன்சத்திரம் விரைந்து சென்று சூரிய குமாரையும், சிறுமியையும் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    அதில் சூர்யகுமார் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், அவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை அளித்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து போலீசார் சூர்யகுமார் மீது போக்சோவில் வழக்கு பதிந்து கைது செய்தனர்.

    • சசிகலா நேற்று முன்தினம் மகாலிங்கம் நகர் வீட்டுமனை காலி இடத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • சசிகலாவின் கணவர் ராமன் காரிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் காரிப்பட்டி அருகே உள்ள குழந்தைசாமி நாடார் நகரை சேர்ந்தவர் ராமன் (வயது 38). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சசிகலா (வயது 31). கணவநமனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களது மகன், மகள் ராமனுடன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வசிக்கின்றனர். சசிகலா மட்டும் தனியாக காரிப்பட்டியில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் சசிகலா நேற்று முன்தினம் காரிப்பட்டி மகாலிங்கம் நகர் வீட்டுமனை காலி இடத்தில் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். காரிப்பட்டி போலீசார், உடலை மீட்டு ரத்தக்கறையுடன் கிடந்த மதுபாட்டிலை கைப்பற்றினர். மேலும் அங்கு பதிவான கைரேகைகளை சேகரித்து கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

    இது தொடர்பாக சசிகலாவின் கணவர் ராமன் காரிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதில், அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் பிரபு என்பவர் மீது சந்தேகம் உள்ளது. அவர் தான் இந்த கொலையை செய்திருக்கலாம் என கூறியிருந்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கட்டிட வேலை செய்து வந்த இடத்தில் ராமனுக்கு, பெயிண்டிங் தொழிலாளி பிரபு (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நண்பர்களாகினர்.

    இந்த பழக்கத்தின் அடிப்படையில் பிரபு, அடிக்கடி ராமன் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது சசிகலாவுடன் பழக்கம் ஏற்பட்டு நாளாடைவில் கள்ளத் தொடர்பாக மாறியது. சசிகலா தனியாக வசித்து வந்த நிலையில் கள்ளக்காதலன் பிரபு அவரை செய்திருக்கலாம் என போலீசார் எண்ணினார்.

    இதனால் போலீசார் சந்தேகத்தின்பேரில், பிரபுவை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அவர் பயன்படுத்தி வந்த செல்போனில் பதிவான அழைப்புகள், உரையாடல்களும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் , மதுபாட்டிலில் பதிவான கைரேகையை, பிரபு கைரேகையுடன் ஒப்பிடும் நடவடிக்கையில் கைரேகை நிபுணர்கள் ஈடுபட்டனர்.

    இந்த ஆய்வில், மது பாட்டிலில் பதிவான கைரேகை, சசிகலாவின் கணவர் ராமனுடைய கைரேகை என்பது உறுதியானது. இதனால் பிரபு, இந்த கொலைைய செய்யவில்லை என போலீசாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், ராமனை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதில், சசிகலாவை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல ராமன் கடந்த 11-ந்தேதி இரவு காரிப்பட்டிக்கு வந்தார். அப்போது சசிகலா, பிரபுவை விட்டு பிரியமனமின்றி ராமனுடன் செல்ல மறுத்தார். இதனால் சசிகலாவை கல்லால் தாக்கி, மது பாட்டிலால் குத்தி கொலை செய்து விட்டு, பிரபு மீது புகார் கொடுத்து நாடகமாடியது தெரியவந்தது.

    இந்த கொலைக்கு காரிப்பட்டி கருமாபுரத்தை சேர்ந்த ஹரி (25) என்பவர் உடந்தையாக இருந்துள்ளார். ராமனுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்ட தெரியாது. இதனால் சம்பவத்தன்று ராமனை தனது மோட்டார் சைக்கிளில் மகாலிங்கம் நகர் வீட்டுமனை பகுதிக்கு ஹரி அழைத்து வந்து உதவியுள்ளார். சசிகலா கொலை செய்து விட்டு, ராமன் அதே மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளார் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து, சசிகலாவின் கணவர் ராமன், கொலைக்கு உதவி செய்த ஹரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஜெயிலில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.

    • கரூர்-சேலம் சாலையில் பிள்ளைகளத்தூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் அருகில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • பெட்டிக்கடையில் மதுப்பாட்டில்களை வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    பரமத்தி வேலூர்:

    ஒடிசா மாநிலம் ஸ்ரீ சண்டன்பூர் பகுதியை சேர்ந்தவர் சுடரசன்சாகு (வயது 51). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி அருகே கரூர்-சேலம் சாலையில் பிள்ளைகளத்தூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷன் அருகில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் இவர் பெட்டிக்கடையில் மதுப்பாட்டில்களை வைத்து விற்பனை செய்து வருவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட பெட்டி கடைக்கு சென்று சோதனை நடத்தி அவரை கைது செய்தனர். அவர் விற்பனைக்கு வைத்திருந்த 10 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பரமத்தி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    • 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது
    • போலீசார் விசராணை

    ராணிப்பேட்டை,

    ஆற்காடு அடுத்த அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயது பெண். இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்று தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் இந்த பெண்ணுக்கும் திருவண்ணாமலை மாவட்டம் களம்பூர் அடுத்த ஏத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன்(28) கூலி தொழிலாளி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார்.

    அங்கு வந்த வேல்முருகன் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார்.

    இதில் அந்த பெண் தற்போது 5 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து அவர் வேல்முருகனை நேரில் சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார்.

    இதற்கு வேல்முருகன் எனக்கும் இந்த கர்ப்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறி திருமண செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அந்த பெண் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஷாகின் வழக்கு பதிவு செய்து வேல்முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மது விலக்கு குற்ற தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • சோதனை செய்த போது 14 பாக்கெட்டுகளில் கள்ள சாராயத்தை கடத்தி செல்வது தெரியவந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியில் மது விலக்கு குற்ற தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அரூர்- சித்தரேி செல்லும் சாலையில் சந்தேகமளிக்கும் படியாக இருசக்கர வாகனத்தில் வந்த தேக்கல் பட்டி கிராமத்தை சேர்ந்த ஜடையன் மகன் பழனி (48) என்பவரை சோதனை செய்த போது 14 பாக்கெட்டுகளில் கள்ள சாராயத்தை கடத்தி செல்வது தெரியவந்தது.

    இதனையடுத்து கள்ள சாராயம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் பழனியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • கடந்த சில மாதங்களாக புஷ்பாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு ராஜேந்திரன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • மில்லில் வேலையை முடித்துவிட்டு புஷ்பம் தனது தாய் சின்னபிள்ளையுடன் நடந்து வந்து கொண்டிருந்தார். அங்கு சென்ற ராஜேந்திரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் புஷ்பத்தை சரமாரியாக குத்தினார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குவளைக்கண்ணி கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 32). இவரது மனைவி புஷ்பம் (28). இவர்களுக்கு திருமணமாகி ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    ராஜேந்திரன் பொள்ளாச்சி அருகே கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார். புஷ்பம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார்.

    கடந்த சில மாதங்களாக புஷ்பாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு ராஜேந்திரன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று பொள்ளாச்சியில் இருந்து வந்த ராஜேந்திரன் தனது மனைவியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

    அப்போது மில்லில் வேலையை முடித்துவிட்டு புஷ்பம் தனது தாய் சின்னபிள்ளையுடன் நடந்து வந்து கொண்டிருந்தார். அங்கு சென்ற ராஜேந்திரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் புஷ்பத்தை சரமாரியாக குத்தினார்.

    அப்போது தடுக்க முயன்ற சின்னபிள்ளைக்கும் கை மற்றும் கால்களில் கத்திக்குத்து விழுந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து ஓடி வந்தனர். உடனே ராஜேந்திரன் அங்கிருந்து தப்பித்து ஓடினார்.

    அவர்கள் புஷ்பா மற்றும் அவரது தாயாரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு புஷ்பாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    படுகாயம் அடைந்த சின்னபிள்ளைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.

    ×